Unknown
இதோ  இந்த நொடியில் கூட பல கோடி மனிதர்கள் புன்னகைக்கக்கூடும், அது காரணமேயில்லாதாதகவும் இருக்கக்கூடும், காரணம் கருதியும் இருக்கக்கூடும், சிரிக்க வேண்டுமே என்று சிரிக்கவும் வாய்ப்பிருக்கிறது, சிரிக்கவே கூடாதென்று வாய்பொத்தி, பின்பு முடியாமல் விழுந்து, புரண்டு, கண்ணில் நீர் வர சிரிக்கும் சூழலும் அமையக்கூடும், எப்படியோ நம்மில் யாரோ ஒருவரோ, ஒரு கூட்டமோ சிரித்துக்கொண்டே இருக்கிறது எப்போதும்….


நாம் எல்லோருமே மகிழ்ச்சியாய் சிரித்துக்கொண்டே இருக்கவே நினைக்கிறோம், ஆசைப்படுகிறோம், ஏதாவது செய்து எல்லோரையும் சிரிக்கவைக்கே முயற்சிக்கிறோம், நம் முயற்சியில் நமக்கு பிடித்தவர்கள் சிரித்துவிட்டால் துள்ளிக்குதிக்கிறோம், உலகத்தையே மறந்து போகிறோம், அந்த சில நொடிகள் தேவனாகிறோம் அல்லது தேவதையாகிறோம். நமக்கு புன்னைகையில்லாத உலகத்தை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, பொதுவாக புன்னகையில்லாமல் உம் என்று இருக்கும் மனிதர்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை….இப்படி புன்னகைக்கு நிறையவே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.


என் கேள்வி உண்மையிலே புன்னகை அவ்வளவு முக்கியமா?
நம்மை சுற்றி வாழும் எந்த விலங்கும் எப்போதும் புன்னகை செய்வதில்லை அல்லது புன்னகை என்ற உணர்வே அவைகளுக்கு இருப்பதில்லை…
அப்படியென்றால் புன்னகை முக்கியமில்லையா?

அட போடா! பைத்தியக்காரா! நாம் மனிதர்கள் அவைகள் விலங்கள் அதனால் தான் எப்படி.. என்கிறிர்களா…
அறிவாளிகளே! புரிந்துக்கொள்ளுங்கள், மனிதனும் விலங்கே, நாமும் அவைகளிள் ஒரு கூட்டமே…
போடா கிருக்கு!!! இந்த பூமி எங்களுக்காக கடவுள் படைத்தது, அனைத்து உயிரினங்களும் எங்களுக்கு சேவைச்செய்யவே படைக்கப்பட்டன என்று மல்லுக்கு வரும் கடவுள் நம்பிக்கையாளர்களே, பொறுங்கள், எப்படியும் நீங்கள் இந்த பூமியை அழித்தால் உங்கள் கடவுள் “ஜீ..பூம்..பா…” போட்டு மற்றொரு பூமி படைத்துதருவார், அவருக்கு தேவையெல்லாம் அதிக பட்சம் 7 நாட்கள் தானே…

ஆதலால் என்னோட பிரச்சனைக்கு வாருங்கள்,
புன்னகை அவ்வளவு முக்கியமா?
சரி இப்போதைக்கு இப்படி ஒப்புக்கொள்வோம்…
மனிதனுக்கு புன்னகை முக்கியம், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நம்பிக்கையை உண்டாக்க, அன்பைச் சொல்ல, ஏன் உடம்பை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ளக்கூட…

சிரி இப்போ அடுத்த கேள்வி?
எல்லா புன்னகையும் முக்கியமானவையா? மகிழ்ச்சியை வெளிப்படுத்துவையா?
அன்பை சொல்பவையா???

ஐயோ!!! முடியல.. ஆமாம் சாமி… என்றால்

தமிழீழத்தில் எமது தமிழினத்தின் மீது மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திவிட்டு, அந்த படுகொலையின் மொத்த பங்கும் எனக்கே என்று பறைசாற்றி, இலங்கையின் ராசாவாக  மூடிசுட்டிக் கொண்டு, வரும் தேர்தலில் எமது கூட்டணி ஜெய்த்தே தீரும் என்று முத்துப்பல் தெரிக்கும் @#$!@# ராஜபக்சே வின் புன்னகை எவ்வளவு முக்கியம்? எப்படிபட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது?

தன் மனைவிக்கும், துனைவிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஆரம்பித்து தமது பேரன்/பேத்தி களை உள்ளடக்கி, இனி மேல் பிறக்க போகும் கொள்ளு பேரன்/பேத்திகள் முதல்க்கொண்டு கணக்கு பார்த்து தமிழ்நாட்டையும், பதவியையும் பிரித்து கொடுத்துவிட்டு, காசுக்காகவோ, சாதிக்காகவோ, இலவசத்துக்காகவோ ஒட்டு போடப்பொற நாய்க நீங்க!!! என்று நம்மை எல்லாம் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் @#@%$%^!$ கலைஞகரின் சிரிப்பு, எவ்வளவு முக்கியம்? எந்த வகையை சார்ந்தது???

என்ன பேச்சே காணோம்? ஏன் இந்த மெளனம்???
சரி விடுங்க, சிந்திச்சா கடவுள் கண்ண குத்திரும்….

இவ்வளவு சொல்றியே அப்படி உனக்கும் சிரிப்புக்கும் என்ன தான் பிரச்சனை, என்கிறிர்களா?


அந்த சிரிப்பு தான் பிரச்சனை, கொஞ்ச காலமாமே எனக்கு சிரிப்பே வரதில்லை, அப்படியே தப்பி தவறி சிரிச்சாலும் அது உண்மையா மனசிலிருந்து வந்த மாதிரியில்ல, சும்மா சிரிக்கனுமேனு சிரிச்ச மாதிரியிருக்கு, இதை பார்த்துவிட்டு என்னை உண்மையா நேசிக்கிறவங்க வருத்தபடுறாங்க, “என்ன தான் டா ஆச்சு?” னு கேட்கறாங்க… அப்புறம், என்னை சுத்தியிருக்கிற பச்சை தமிழர்களோ “Where is your Smile டா?”(உன் சிரிப்பு எங்கே?) கேட்கிறாங்கா?

இவ்வளவு பாசமாக விசாரிக்கும் போது, எனக்காக இல்லையென்றாலும் அவுங்களுக்காகவாது என்னுடைய சிரிப்பை தேடலாமென்று முடிவுபண்ணிட்டேன், அதான் அதை தேடுறதுக்கு முன்னாடி அது முக்கியமா என்று யோசிச்சது தான் இந்த முதல் பதிவு…இனி வரும் பதிவுகள் ஏன்? எதற்கு? எப்படி? இந்த சிரிப்பு என்னையோ/நம்மையோ விட்டு பிரிந்துபோனது, அதை எப்படி தேடுவது பற்றித்தான்... இனிமே முழுசா தேடல் தான்..

ஆதலால்,

எற்கனவே சிரிப்பை கண்டுபிடித்தவர்கள் வழிக்காட்டுங்கள்…
என்னைப்போல் தொலைத்தவர்கள், கை சேருங்கள் தேடுவோம் சிரிப்பை!!!

                                                                        இப்படிக்கு,
                                                                        சிரிப்பை தேடும்,
                                                                        சிரிப்பை தொலைத்தவன்…
                                                                                    (அல்லது)
                                                                        சிரிப்பை தொலைத்தவர்கள்…
தேடல் தொடரும்….



3 Responses
  1. தோழர் மோகன்,

    அடிமைப்பட்ட இனத்தின் வலிகளிலிருந்து வாழ்கையை கற்றுக்கொண்டவள் என்பதால் சொல்கிறேன் புன்னகை முக்கியம். புன்னகையின் பின்னாலும் மறைந்திருக்கும் சோகத்திற்கு மனோ வலிமை அதிகம்.

    நான் புன்னகைக்க மறந்த பொழுதுகளும் உண்டு. மழலையின் சிரிப்பு பற்றி பேசவே இல்லை நீங்கள்.


  2. Unknown Says:

    வருகைக்கு நன்றி ரதி,/*மனிதனுக்கு புன்னகை முக்கியம்*/ நானும் ஒப்புக்கொண்டுவிட்டேனே புன்னகை முக்கியமென்று,
    "எனக்கு புன்னகை செய்ய சுழல் இருக்கிறது என்பதாலோ,நான் நேரடியாக எந்த அநியாயங்களாலும் அவதிப்படவில்லை என்ற காரணத்திலாலோ,எனக்கு விரல் தொடும் தூரத்தில் கேளிக்கைகள் இருக்கு என்பதாலோ நான் புன்னகைக்கிறேன் இப்படி ஒரு சுழலோ,வாழ்க்கையோ கடவுளால் கிடைக்கபெறாதவர்கள் அல்லது சூழ்ச்சி செஞ்சாவது அமைத்துக்கொள்ளதெரியாதவர்களை நினைத்து நான் என்ன செய்ய? இதுனால எனக்கு என்ன வரபோவுது? இது அவர்கள் விதி" னு நினைக்கிற பொதுபுத்தியை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதே இந்த தொடர் பதிவின் நோக்கம், இதனால் தான் கலங்கமேயில்லாத குழந்தையின் சிரிப்பை பற்றி பேசவேயில்லை,இதை வரும் பதிவுகளில் தெளிவுபடுத்துகிறேன் தோழி...
    தொடர்ந்து வாருங்கள், விமர்சியுங்கள், விவாதிப்போம்...

    தோழமையுடன்,
    மோகன்


  3. //மனிதனும் விலங்கே, நாமும் அவைகளிள் ஒரு கூட்டமே… // அடடே... அப்படியா...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner