ஏப&
27
எனக்கு பிடித்த பாவேந்தர் பாரதிதாசரின் கவிதைகள் - 1!!!
நிலா அஃறிணையா? அதுக்கு உயிரில்லையா? அது வெறும் பாலைவனம் தானா? ஆம் என்று தான் சொல்லும் அறிவியல் அது தான் உண்மையும் கூட...
இருந்தால் என்ன, பெளர்ணமி நாளில் கடற்கறை மணலில், கடல் என் கால் நனைக்க, அந்த முழுநிலவை பார்க்கும் போது எனக்கு நிலா, மங்கையின் முகமாக தான் தெரிகிறது, கடற்கரையில் அத்தனை பேர் இருந்தும் என் உதடு குவித்து அவளுக்கு (நிலாவுக்கு) முத்தம் குடுக்கிறேன், எனக்கு சிறகில்லையென்பதால் தானே அவளை நெஞ்சார தழுவிக்கொள்ள முடியவில்லை என்று ஆதங்கபடுகிறேன், சரி அவளாவது நான் படும் காதல் துயர் கண்டு அவள் ஊடல் விடுத்து வானம்விட்டு இறங்கி வரக்கூடாதா? என்று வருத்தபடுகிறேன், சில நேரங்களில் மண்டியிட்டு என் இரு கை விரித்து அவளை நோக்கி கெஞ்சியும் பார்த்துவிட்டேன் என்ன கோபமோ? அவள் இன்று வரை தரையிறங்கி வருவதில்லை....
என்ன முட்டாள்தனமாக தெரிகிறதா? பரவாயில்லை இந்த உணர்ச்சியை பொருத்தவரை நான் ஒன்றும் தனி மனிதனல்ல, எனக்கு தெரிந்து எல்லா கவிஞ்கர்களுமே நிலாவை பாடியிருக்கிறார்கள், மோகம் கொண்டுயிருக்கிறார்கள், பைத்தியமாக காதலித்திருக்கிறார்கள், ஏன் பாரதிதாசன் கூட இதில் அடக்கம் தான், வியப்பாக இருக்கிறதா, இதோ அவரின் கவிதை கிழே, நீங்களே முடிவுசெய்யுங்கள்...