ம&#
18
இந்திய தமிழர்களே, எப்போதும் வேடிக்கை மட்டுமே பாருங்கள்!!!
இந்திய தமிழர்களே,
நலமா?
உங்களுக்கேன்ன
நன்றாக திங்க இலவச அரிசி,
உண்ட களிப்பு நீங்க இலவச தொலைக்காட்சி,
நேரம் போக்க இளைய தலைவலியின் 50 தாவாது படம்,
வெட்டி பேச்சு பேச குஷ்புவின் அரசியில் வருகை,
போதா குறைக்கு செம்மொழி மாநாடு..
ரொம்பவே நல்லாயிருக்கிறீர்கள்...
நாங்கள் தான்,
சம உரிமைக்காய்
அறவழியில் அணிதிரண்டோம்;
அப்படியே எறித்தான் சிங்களவன்...
எதிர்வினையாய் ஆயுதம் ஏந்தினோம்
பயங்கரவாதிகள் என்றது இந்தியா,
நீங்களும் வாய்மூடி ஆதரித்தீர்கள்
உங்கள் மண்ணில் வைத்து
ஒரு களவாணி உயிரை காவுகொண்டதற்காக?
சுதந்திரம் வேண்டி
சிங்களவன் மீது போர் தொடுத்தோம்,
இந்தியா சிங்களவனின் இறையாண்மையைக்காக்க
அள்ளி அள்ளி கொடுத்தது
குண்டுகளையும், தோட்டாக்களையும்
தமிழ்நாட்டின் தரைவழியே...
சிங்களவன்
மூன்றே நாளில் முடித்துவிட்டான்
ஒரு மாபெரும் இனப்படுகொலையை,
நீங்களோ
ஏற்கனவே காசு, சாதி, மதத்தினால்
முடிவாகியிருந்த தேர்தல் முடிவுகளை
பிடித்து முட்டிக்கொண்டு இருந்தீர்கள்...
உங்கள் பத்திரிக்கைகளோ
போர் முடியும் வரை ஆருடம் சொன்னார்கள்
முடிந்தப்பின்,
போராளிகளை குற்றவாளியாக்கி
ராஜபக்சேவே நாயகன் ஆக்கினார்கள்...
"இலங்கை ரத்னா" என்ற ஒரு விருதுக்காக
இன்று வரை முதல் பக்கத்தில் ராஜபக்சேக்கு
கட்டம் கட்டி நக்கி பிளைக்கிறார்கள்....
உங்கள் தமிழின தலைவரே(துரோகி)
தந்தி குடுத்தார், தபால் போட்டார்
திடீரெண்டு ஒரு வேலை உண்ணாவிரதம்(த்தூ)
இருந்து போரையே நிறுத்திவிட்டதாக சொல்றாறு..
வெங்காயம்....
இதோ,
இனப்படுகொலை நடந்து
ஒரு ஆண்டு முடிவடைந்துவிட்டது