Unknown

காதலே வாழ்க்கையாய்...

நான் ஒரு காதல் கதை சொல்லப்போறேன், வசன கவிதையில், இது என்னுடையதுமட்டுமல்ல, உங்களுடையதாகவும் இருக்கலாம், யாருடையாதகவும் இருக்கலாம், ஆனால் இது ஒரு காதல் கதை, காதலின் கதை...

கதையின் கதாநாயகனாகிய
நான்,
ஒரு பொறியியல் கல்லூரி மாணவன்
சாரி
டமிலில சொல்லனும்லஎ
இஞ்ஜினேரிங்க் காலேஜ் சுடன்ட்
பச்சை தமிழர்களுக்காக, செம்மொழி தமிழில் கீழே
"Enginnering College Student"

நான் நல்லா Dance ஆடுவேன்
எல்லாம் அவளை Impress பண்ணதான்...

அவள்

அவள் ஒன்றும் நிலாமகளல்ல,
நிச்சியமாய் தேவதையுமல்ல,
ஒரு சாதாரண பெண் தான்
ஆனால்
ஏதோ என்னமோ?
எனக்கு மட்டும்...
அவள் ஒரு நிலாமகள்,
நிச்சியமாய் ஒரு தேவதை,
சத்தியமாய் பேரரழகி...

அவள் ஒரு குழந்தை
என் குழந்தை,
எப்போதும் என் கரம் பற்றி
தோள் சாய்ந்து தான் நடப்பாள்,

எப்போதெல்லாம் முடியுமோ
அப்போதெல்லாம்
என் மடி சாய்ந்து
என் கரம் பற்றி தான்
தூங்குவாள் குழந்தை போல்...

அப்போதெல்லாம் நினைப்பேன்....
அவளை அப்படியே
அள்ளியெடுத்து குழந்தை போல் கொஞ்ச முடியாதாயென்று....

இப்படியே போனது 4 வருடம்,

கல்லூரியில் எல்லோரும்
முடிவு கட்டீனார்கள்
நாங்கள் காதலர்களென்று
நானும் தான்...

ஆனால்,

கல்லூரியின் கடைசி நாளில்,
கைக் கொடுத்தால்,
கட்டி அணைத்தால்,
கண்ணீர் சிந்திவிட்டு....
கலைந்துப் போனாள்,
கரைந்துப் போனாள்,
காணாமல் போனாள்...

அதே இடத்தில் நின்றிருந்தேன்
கண்ணீருடன் வெகு நேரமாய்,
அதே கண்ணீருடன் நகர்ந்துவந்தேன்
நடைபிணமாய்...

Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner