Unknown
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழர் சரவணகுமார், தோழர் எனது ஆருயிர் நண்பர், மனிதம் போற்றும் பண்பாளர், செக்கு மாட்டு சிந்தனைகளில் சிக்காத சிந்தனையாளர், இதுவரை பேச்சாலும், செயலாலும் மட்டும் தன் சக மனிதர்களை சிந்திக்க செய்த தோழர் முதல் முறையாக பேனா பிடித்திருக்கிறார், அதற்கு தளம் அமைத்து கொடுத்ததற்கு பெருமை கொள்கிறேன். தோழர் தொடர்ந்து தன் எழுத்தானி கொண்டு சிந்தினை பரப்ப வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

எந்திரனும் கழிவ றைகளும்!!!
உழக தமிழர்களின் உயிர்துடிப்பாம் "எந்திரன் - தி ரோபட்" அக்டோபர் முதல் நாள் உலகெங்கிலும் அதன் வெற்றி பயணத்தை தொடங்கயிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய் செலவில் உலக தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடத்தபட்டது, இதில் களந்து கொள்வதற்காக பெரும்பாலான தமிழ்திரையுலக நட்சத்திரங்கள் வானில் மின்னிக் கொண்டே ஆகாய மார்க்கமாக மலேசியாவிற்கு பயனித்தன. இதற்கான செலவு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை, சுமார் 500 பேர் விமான பயணம், தங்கும் வசதிகள், நிகழ்ச்சி செலவு ஆக மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும், இது போல் இந்த தனி சிறப்புவாய்ந்த படத்திற்கு எத்தனை விளம்பரங்கள், நிகழ்வுகள் மற்றும் செய்திகள் ஏற்படுத்தபட்டுள்ளன என்பதை பட்டியல் போடவே முடியாது. இருந்தாலும் இதோ சில,

மூன்று நாட்கள் இசை வெளியீடு தொகுப்பு விழா சன் தொலைகாட்சியில்
மீண்டும் எப்படி தொகுத்தோம் என்று ஓர் மறு ஒளிபரப்பு
பட டிரெயிலர் வெளியீட்டு விழா
குமரி முதல் சென்னை வரை "எந்திரன் ரத உலா"
முன்பதிவு செய்திகள், அதனுடன் தொடர்பு உடைய நிகழ்வுகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

நன்பர்களே இணையத்திலிருந்து தெரிந்து கொண்ட தகவலின் படி சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகெங்கிலும்.திரையிடப்படுகிறதாம் எந்திரன்.

இணையத்தில் ஒரு கணக்கு அடித்து சொல்கிறது முதல் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகிவிடும் என்று, முதல் வாரத்தில் மட்டும் மொத்த வசூல் சுமார் 1600 கோடியை தொட்டுவிடுமாம், சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறதாம்.

ரூபாய் 160 கோடி முதலீடு இட்ட படத்திற்கு முதல் வாரத்தில் மட்டும் 1600 கோடி வருமானம் என்றால் இது எல்லாம் யாருடைய பணம், தயாரிப்புக்கு பயன் படுத்தபட்ட 160கோடியை சேர்த்தும் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து தானே சம்பாதிக்கபட்டது.

இந்த 160 கோடியும் வெளிநாடுகளில் விதைக்கபட்டு படமாக்கபட்டுயிருக்கிறது ஆனால் இது தமிழ்நாட்டில் மட்டும் அறுவடை செய்யப்போகும் வருமானம் மூதலீட்டை காட்டிலும் பத்து மடங்கு, இது மட்டுமல்ல "எந்திரன்" என்ற தமிழ்பெயருக்காய் 10 ஆயிரம் வரிச்சலுகையும் பெறுவார்கள்.

இந்த 1600 கோடி ரூபாயும் ஒருவரிடமிருந்து பெறப்போவதுயில்லை, நம் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படயிருக்கிறது, அது அனைத்தும் நம் பணம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும் நான் உங்களிடம் மற்றும் சில தகவல்களை பரிமாறி கொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் வசிக்கும் இந்தியா உலக சுகாதர தரவரிசையில் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் தெரியுமா? அது மட்டும் அல்ல சமீபத்திய ஓர் ஆய்வின் படி ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளை காட்டிலும் ஏழைகள் அதிகமாக வசிக்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களினால் சுமார் 110 நபர்கள் இறந்துயிருக்கிறார்கள். அவ்வளவு எதற்கு நமது ஊரில் உள்ள பள்ளிகளில் சுத்தமான, சுகாதாரமான, தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நமது நகரங்களின் சந்துகளில், சாலை ஓர மரங்களின் அருகில் சிறுநீர் கழிக்காதவர்கள் உண்டா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவரின் பதில்.

இந்த சுகாதார முறைகேட்டினால் .அதிகம் பாதிக்கபடுபவர்கள் பெண்கள் தான்.

நம் தமிழகத்தை பொருத்த வரையில் 4078 மேல்நிலை பள்ளிகள் உள்ளன, இதில் இருபாலர் பயிலும் பள்ளிகள் 3001, இதில் எத்தனை பள்ளிகளில் சுத்தமான கழிவ றைகள் உள்ளன.
பெரும்பாலும் கிராமபுற பள்ளிகளில் திறந்த வெளி கழிப்பிடம் தான்

இங்கு படிக்கும் பெண்கள் குறிப்பாக மேல்நிலை பள்ளியில் படிப்பவர்களுக்கு இயற்கையாக வரும் சில பிரச்சனைகளால் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வது இல்லை, இப்போது சில வசதிகள் இருந்தும் கூட அவர்கள் உடை மாற்றி கொள்வதற்கும், ஓய்வெடுத்து கொள்வதற்கும் தனி அ றைகள் ஏதும் இல்லை,

இது ஒரு புறம் இருக்க, பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட மிகவும் மோசம். ஊருக்கு வெளியில் இயற்கை உபாதைகளுக்காக பேருந்து நிருத்தப்படும், அங்கு எந்த வித பாதுகாப்பு வசதியும் இருக்காது, இது மட்டும் அல்லாமல் சூரியன் வருவதற்கு முன்பாகவே எல்லாத்தையும் முடித்து விட வேண்டிய கட்டாயத்தில் தான் இன்றும் நிறைய சகோதிரிகள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.

இப்படி சரிவர கழிவுகள் வெளியேராத காரணத்தினால் இந்திய பெண்களுக்கு விரைவாக சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.

நமது ஊரில் உள்ள பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் சுத்தமான கழிப்பிடம் இருக்கிறதா? கழிவ றை
இருக்கட்டும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை என்பது தான் ஒரே பதில்...

இப்போது மறுபடியும் எந்திரனை யோசித்து பாருங்கள், நம்மால் ஒரு 2 1//2 மணி நேரம் பொழுதுபோக்கிற்காக எடுக்க படும் படத்திற்கு ரூபாய் 1600 கோடி வருமானம் ஒரு வாரத்தில் ஈட்டி தர முடியும் என்றால், நம் வீட்டு பெண்கள், சகோதரிகள், குழந்தைகள், ஏன் நமக்காக கூட ஓர் சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை நாம் ஒன்று கூடி உருவாக்காமல் இருப்பது ஏன்?, ஏன் நாம் ஒன்று கூடி படம் மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மாற்றி பார்கலாமே, நம்மால் கண்டிப்பாக ஒரு சுத்தமான சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க முடியும், குறைந்த பட்சம் எந்திரனுக்காய் அடிக்க பட்ட பெலஃஸ்(flex) பேனர்களையும் சவரோட்டிகளையும் சுகாதார கழிவ றைகளின் கதவுகளாக மாற்றுவோமே?

சிந்தியுங்கள் தோழர்களே! தோள் கொடுங்கள் தோழிகளே!!!

என்றும் உங்களில் ஒருவன்,
மானுடத்தின் காதலன்,
உங்கள் சரவணகுமார் 

முந்தைய அறிமுகங்கள்:
இலங்கை வாழட்டும் - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 1
முதல் முயற்சி - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 2
Unknown
உங்களுக்கு எதற்கு மூலையும்? இதயமும்? 
அயோத்தியில் ஒரு கோயில் கட்டிவிடுவதால் ராம ராஜ்ஜியம் வந்து விடும் என்று நம்புவதற்கு எதற்கு மூலை? ஒரு மனிதன் போட்டுயிருக்கும் சட்டை காவியா? பச்சையா அல்லது வெள்ளையா என்று மட்டும் பார்பவர்களுக்கும்
தனக்கும், தன் மதத்திற்கு எதிரான அந்த நிற சட்டையை அணிந்ததற்காகவே அவனை கொலை செய்ய துணிபவர்களுக்கு எதற்கு இதயம்?


வரலாறு முழுக்க மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நடத்தபட்ட போர்களும் இழந்த பல கோடி உயிர்களும் போதாதா? இன்னும் அடங்கவில்லையா அந்த வெறி... மனித தவறுக்கு கடவுளை காரணம் ஆக்காதே என்று சொன்னால், பதில் சொல்லுங்கள், பம்பாய் கலவரங்களில் இஸ்லாமியர்களை தேடி தேடி கொன்று குவித்தார்களே இந்து வெறியர்கள், அப்போது ஏன் ராமன் வேடிக்கை பார்த்து கொண்டுயிருந்தான்?, அல்லா இஸ்லாமியிர்களை ஏன் காபாற்றவில்லை? அல்லது அப்படி தன் சக மனிதனை கொடுரமாய் கொலை செய்ய தூண்டிய அந்த எண்ணத்தை படைத்தவர் யார்? ராமனா?, நீங்கள் சொல்லலாம் அந்த எண்ணம் சுயநலம் கருதி இன்னோரு மனிதன் விதைத்தது என்று அப்போது அவனுக்குள் அதை விதைத்தது? இப்படியே போனால் அந்த முதல் விதை யார் உருவாக்கியது? சாத்தான் என்றால்? சாத்தானை படைத்தது யார்? பதில் சொல்லுங்கள்....

எல்லாம் வல்ல கடவுள் ஏன் நன்மையை மட்டுமே படைத்திருக்கலாமே தீமையையும் ஏன் படைத்தார்?

சரி! நாம் எல்லோரும் இந்துகள், "ஹரிஜன்" என்றால் கடவுளின் குழந்தை என்று சொல்லிவிட்டு அவர்களை கருவரைக்குள் அனுமதிக்காது தடுப்பது எது? சாதி திமிரா? ஆதிக்க மனோபவமா? பக்தியா?
இன்னும் கொடுமை 500 ரூபாயை விட்டு எறிந்தால் அதை பொருக்கி கொண்டு கடவுள் சிலையை கட்டிபிடிக்க அனுமதிக்கும் உங்கள் கோயிலின் நிலை தான்...

இதையும் மிஞ்சும் வகையில் கருவரையில் சாந்திமுகூர்த்தமே நடத்திவிட்ட பிறகும் எப்படி வாய் கூசாமல் சொல்லுகிறீர்கள், அங்கு கடவுள் இருக்கிறார்; அது புனிதம்; அங்கு பூநூல் போட்டால் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று.

ஏற்கனவே இருக்கின்ற கோயில்களே இந்த இழிநிலை என்றான போது, எதற்கு இன்னோர் கோயில் அதுவும் அயோத்தியில் என்ன சாதிக்கபோகிறீர்கள் அதை கட்டிவிட்டு, அதை கட்டி முடித்தவுடன் இந்தியாவின் வருமை ஒழிந்துவிடுமா? சமதர்மம் பிறந்துவிடுமா? இல்லை மனிதர்கள் தான் சுயநலம் விட்டுவிடுவார்களா? எதுவும் நடக்கபோவதில்லை அப்புறம் எதற்கு இந்த ஆர்பாட்டம்? இது புதிதாய் கெட்டப்படும் தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் பொருந்தும் தானே?

உங்கள் மூலை கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள் எவ்வளவு முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் உங்கள் மீது திணிக்கபட்டுயிருக்கிறது என்று புரியும், கொஞ்சம் உங்கள் இதயத்தோடு பேசி பாருங்கள் அது சொல்லும், ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு அரை மணி நேரம் அந்த வயது முதிர்ந்த குழந்தைகளோடு பேசிவிட்டு வரும் நிம்மதி ஒரு நாள் முழுக்க கோவிலிலோ, தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ இருந்தாலும் கூடக் கிடைக்காது என்று.

நம் முன்னே அன்பும், அரவணைப்பும் வேண்டி ஆயிரமாயிரம் முதியவர்கள் இருக்கிறார்கள்,

நல் கல்வி அறிவு வேண்டி பல லட்ச குழந்தைகள் இருக்கிறார்கள்,

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனது தவிர ஒன்றுமே கிடைக்காத கோடான கோடி உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் விடியல் வேண்டி...

சிந்தித்து பாருங்கள் நண்பர்களே! நாம் கட்டவேண்டியது புதிய கோயில்களையா? சிந்திக்க கற்று தரும் பள்ளிகளையா?

ஒன்று கடவுளை மறந்துவிட்டு, மானுடத்திற்காக போராடுங்கள் அல்லது மூடநம்பிக்கைகளும், போலி சம்பிராதயங்களும்,மத சாயங்களும்
நீக்கி அன்பின் ஊடாகவும் அறிவியல் ஊடாகவும் கடவுளை தேடுங்கள்....

அதை விடுத்து மூடநம்பிக்கைகளில் மூழ்கி உங்களையும் கடவுளையும் சிறுமை படுத்தாதீர்கள்.

இல்லை இல்லை நான் சிந்திக்க மாட்டேன் என் தாத்தா இப்படி தான் இருந்தார், என் அப்பாவும் இப்படி தான் இருந்தார் அதனால் நானும் இப்படி தான் இருப்பேன் என்றால் ஒப்புக்கொள்ளுங்கள் உங்களுக்கு மூலையும் இதயமும் தேவையில்லை என்று!!!

என்றும் மானுடத்தின் காதலன்,
தோழன் மோகன்...
Unknown
கீற்றுக்கு உதவிடுங்கள்! நண்பர்களே!!!

எனது பொதுபுத்திகள், பிற்போக்குதனங்கள்,செக்கு மாட்டு சிந்தனைகளில் இருந்து நான் சிந்தனையாளானாய் பரிணாமம் கொண்டதற்கு கீற்று இணையதளத்தின் பங்கு ஆக பெரியது, வைரமுத்து வரிகளில் வண்டு போல் மயங்கி கிடந்த என் கண்ணத்தில் அரைந்து தலித் சகோதரர்களின் தெருவுக்கு இட்டு சென்றன கீற்றுவில் வெளிவந்த கவிதைகள், மூடநம்பிக்கைகளில் மூழ்கி போய் இருந்த என்னை பெரியாரிய பார்வையில் பயணிக்க வைத்தன கீற்றுவில் வெளிவந்த கட்டுரைகள், தான் தனது என்று வாழ முடிவு செய்து இருந்த என்னை சமூகத்தின் பால் தீரா காதல் கொள்ள செய்தன கீற்றுவில் வெளிவந்த சிற்றிதழ்கள், ஒடுக்கும் அதிகார வர்கத்தின் ஓலம் மட்டுமே கேட்டு கொண்டு இருந்த என் செவிகளில் முதல் முறையாக ஒடுக்கபடுவோரின் குரல்கள் கேட்டது கீற்று நடத்திய கூட்டங்களில் தான்...

"தனி ஒரு மனிதனான என்னால் என்ன செய்ய முடியும்?", "என்னை சுற்றி எல்லாரும் சுயநலகாரர்களாய் இருக்கிறார்கள்", "எனக்கு சமுகத்திற்கு உழைப்பதனால் என்ன கிடைக்க போகிறது?", "நான் மட்டும் ஏன் சமுகத்திற்காய் உழைக்க வேண்டும்" போன்ற எனது சமரசங்கள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக போனது, தினமும் காலை 4 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 11 மணி வரை அலுவலக பணி முடித்துவிட்டு எந்த ஒரு பலனை எதிர்பார்க்காமல் மாற்று ஊடகத்தை கட்டி அமைக்க போராடும் கீற்று ரமேசுவையும் கீற்று நண்பர்களையும் கண்ட பின்பு...

தோழிகளே/தோழர்களே,

இதோ இப்படி என் உள்ளத்தில் மட்டுமல்ல லட்சக்கணக்கான உள்ளங்களில் மாற்று சிந்தனை விதையை தூவிய கீற்று இப்போது இயங்கு நிலையில் இல்லை, பொருளாதார நெருக்கடியால் முடங்கி கிடக்கிறது அந்த ஆலமரம்! நெஞ்சு வலிக்கிறது நன்பர்களே, நான் உறுதியாய் கீற்று இணையதளத்திற்கு உதவ போகிறேன் நிதி கொடுத்து மட்டுமல்ல, மானுடம் கொண்ட மனிதனாக வாழ்ந்தும் காரணம் கீற்று நண்பர்கள் கீற்றை ஆரம்பித்து 6 வருடமாக இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் கீற்றை தோடர்ந்து இயக்கி இருக்கிறார்கள் என்றால் அது பணத்தின் மீதான நம்பிக்கையல்ல நம் மானுடத்தின் மீதான நம்பிக்கை, ஆதலால் பதிவுலகமே கீற்று இணையதளம் மறுபடியும் நமக்காகவும், சமூகத்திற்காகவும் பயணிக்க உங்களால் ஆன அனைத்து உதவியையும் செய்யுங்கள்... இது நமக்கும், அடுத்த தலைமுறைக்குமான முதலீடு! செலவல்ல!!!

என்றும் மானுடத்துடன் வாழ முயற்சிக்கும்
ஓர் மனிதன்,
மோகன்....

கீற்று கட்டுரை:

கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் பாதுகாத்து வருவதால் அதிகரித்திருக்கும் Memory usage & MySQL usage காரணமாக‌ dedicated server-க்கு மாறியாக வேண்டியுள்ளது. Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்ட‌ வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பதிவு செய்வதாக இருந்தால் இரண்டு லட்சம் வேண்டும். இது கீற்று இணையதளத்திற்கு மிகப்பெரிய தொகை.
கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும்.
கடந்த ஜூலை மாதம் ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கருத்தரங்கை நடத்திய வகையில் ரூ.10,000 கடன் என்பதுதான் கீற்றின் நிதிநிலைமை. எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.
தற்காலிகமாக கீற்றின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளோம். கீற்று இணையதளத்தின் படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் backup எடுத்துள்ளோம். போதிய அளவு நன்கொடை கிடைத்தால், நிச்சயம் கீற்று பழையபடி வெளிவரும் என்று நம்புகிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை
IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், 
paypal-ஐ பயன்படுத்தவும். https://www.paypal.com/us/cgi-bin/webscr?cmd=_flow&SESSION=Z7sE9TIqPf1mYFZ1_j9rsj-YzlWxjXVkdNBhDInj-wAGo6IO27lAkeMLN6a&dispatch=5885d80a13c0db1f8e263663d3faee8dc18bca4c6f47e633fcf61b288f5ebea2

Cheque/DD அனுப்ப வேண்டிய முகவரி: 
Ramesh,
22/34, Saraswathi Nagar 5th street,
Adambakkam
Chennai - 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994
http://www.keetru.com/index.php


மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சுடுக்கவும்
Unknown
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழி புவனா, புவனா எனது அருமை தோழி மட்டுமல்ல எனது அன்பு தங்கையும் கூட, இவள் பல வகைகளில் தனித்துவம் வாய்ந்த ஆளுமை, இவளின் எழுத்துகளையும், சமுக அக்கறைகளை பார்க்கும் போது இளைய சமுதாயத்தின் மீது நம்பிக்கை அதிகமாகிறது, இவளின் முதல் மழலை கிருக்களில் இருந்து இந்த "முதல் முயற்சி" கட்டுரை வரை இவளின் எழுத்துக்கள் அடைந்து வரும் பரிணாம வளர்ச்சியை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவும், பெருமிதமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது, இது போல் புவனாவின் எழுத்துக்கள் தொடர்ந்து அடுத்த அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசையோடும் அவளின் எழுத்துக்கள் பெண்ணின் சமுக அவலங்களை அகற்ற பயண்படவேண்டும் என்ற வாஞ்சையோடும் இணையத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முதல் முயற்சி 

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே” என்று எவ்வளவு ஆனந்தத்துடன் பாரதி பாடினானோ ! அதே அளவு ஆனந்தத்தை நானும் உணர்ந்தேன் பெண்ணிற்கு 33 % இடஒதுக்கீடு கிடைத்த அன்று.ஆம் இந்த கனவு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நினைவாகி இருக்கிறது. இவ்வளவு காலதாமதம் அவசியம் தானா ? என்னை பொறுத்தவரை இந்த காலதாமத்திற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம். நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய தவறு நாம் கூடி அமர்ந்து நம்முடைய பிரச்சனைகளை விவாதிப்பதில்லை.பெண்தோழிகள் ஒன்று கூடினால் பெரும்பாலும் திரையில் வரும் கதாநாயகியின் நிறத்தையும், அழகையும், இல்லையென்றால் தொலைக்காட்சியில் அழுதுவடியும் பெண்களையும், பெண்களையே இழிவு படுத்தும் தொடர்களையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஏன்? நாம் பொதுவுடைமையை விவாதிக்க கூடாதா? என்றுக் கேட்டால் இந்தக் கேள்விக்கு எந்தப் பெண்ணாலும் பதில் கூறமுடியவில்லை. நம்மிடையே உள்ள கழைகளை நாம் கூடி தான் கலைய வேண்டும். இனியாவது நாம் ஒன்று கூடி நம் பிரச்சனைகளை விவாதித்து ஒரு தீர்வு காணலாம் என்ற உந்துதலில் தான் இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன். என் பயணத்திற்கு இந்த கட்டுரை ஒரு முதல் முயற்சியாக இருக்கட்டும் . . . . . . . . . . . . .


நம் பெண்கள் சமூகத்தில் தான், ஒரு பெண்சிசு ஜனனம் எடுப்பதற்கே பெரிய போராட்ட்த்தை எதிர்கொள்கிறது.இயற்கையாக ஒரு பெண்சிசு கருவானாலும் அந்தசிசு இந்த பூமியில் பிறக்கலாமா ? இல்லையா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்கைகளில் தான் உள்ளது. இப்பொழுது யாரும் கள்ளிப் பால் ஊற்றி பெண்சிசுவை கொலைச் செய்வயதில்லை. ஆனால் ஒரு தாய் சுமப்பது பெண்குழந்தை என்பது உறுதியானால் அவளை நடத்தும் முறை மாறிவிடுகிறது. இதில் அவலம் என்னவென்றால் பல நேரங்களில் ஒரு பெண்ணின் மனதை நோகடிப்பது மற்றொரு பெண் தான். குழந்தையில் இந்த பேதம் ஏன் ? என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை. அன்று சங்க காலத்தில், அதிக குழந்தைசெல்வங்கள் இருந்த காலத்தில் கூட தனக்கு மகள் பிறந்த செய்தியை, “என் சமூகத்தையே மேம்படுத்த வீரத் திருமகள் பிறந்து விட்டாள் என்று மார் தட்டி சொன்ன உங்கள் வீரம் எங்கே போனது ? ”

இடைக்காலத்தில் நாம் இழ்ந்த கல்வி என்னும் அறிவு தாகத்தை எப்படியோ போராடிப் பெற்றுவிட்டோம்.ஆம் இப்பொழுது பெரும்பாலும் பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இன்னும் தனக்குத் தகுந்த பாடத்தை தகுந்த இடத்தில் தேர்ந்தேடுக்கும் உரிமை பல இடங்களில் பெண்களுக்கு நிராகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைகளையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்தி வெற்றிப் பெற தவறிவிடுகின்றனர்.

இன்று எந்தவிதபாகுபாடும் இல்லாமல் ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பெண்கள் வரை சந்திக்கும் ஒரே கொடுமை “ பாலியியல் கொடுமை ”.பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் , வேலை செய்யும் இடங்களிலும், பேச்சின் மூலமோ அல்லது செய்கையினாலோ பல பெண்கள் இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேண் – அதை
அங்கொரு காட்டில் பொந்திடை வைத்தேன் ;
வெந்து தணிந்து காடு ; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

எங்கே போனது அந்த அக்னி குஞ்சு ?

இன்றும் அது நமக்குள் எரிந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த வீரத்தைத் தட்டி வளர்ப்பதற்கு தான் இங்கே யாரும் இல்லை .அனைத்துப் பொற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இந்த மோசமான சமூகத்திடம் இருந்து காப்பதாக எண்ணி அவர்களின் அழகிய சிறகுகளைப் பறித்து விடுகின்றனர். இதைவிட அவர்களிடம் உள்ள வீரத்தை வளர்த்து தன்னை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றிக் கொள்ளும் வழியை கற்றுக் கொடுக்கலாம் இல்லையா ? ஆண்சமுகம் பெண்களை போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் இந்த மனோபாவம் மாற வேண்டும்.

பலஇடங்களில் பெண்களின் வாய்கள் திறக்கப்படுதே

இல்லை. ஆண்மகன் தன் கருத்தை தெரிவிக்கும் பல இடங்களில் பெண்ணின் கருத்துக்கு மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது.அதையும் மீறி தன் கருத்தை தெரிவிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகம் சுட்டும் பட்டங்கள் “அடங்காதவள், திமிர்பிடித்தவள் ” .


இந்த நவீன உலகத்தில் பெண்கள் , ஆறே நாளில் முகம் வெளுக்கும் , பிரகாசம் அடைவீர்கள் என்பதை நம்பி ரசிக்கும் அளவுக்கு தன் இயற்கை நிறத்தை ரசிப்பதேயில்லை. பல பெண்கள் மனதில் இது பெரிய தாழ்வுமனப்பான்மையை வளர்கிறது.இன்னும் சில பெண்கள் தங்களது வெற்றிக்கு தன் திறமையை நம்புவதைவிட தங்கள் வெளிப்புறத் தோற்றத்தை மிகவும் நம்புகிறார்கள்.

பெண்ணில் வாழ்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து வெற்றிக் கொண்டு மேன்மை அடைந்துள்ள இந்த சமுகம் , அத்தகைய பெண்ணையே அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய ஆற்றலை உலகிற்கு பறைசாற்ற இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.

பெண்கள் அன்னங்களாம்
ஆம் அன்னங்கள்தான்
பாலிலிருந்து தண்ணீரைப்
பிரிதெடுக்கும் அன்னங்களல்ல
பாலிலிருந்து விஷத்தையே
பிரித்தெடுக்கும் வித்தியாசமான அன்னங்கள் !

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை உடைத்தெறிந்து பெண்சமூகமே ஒன்று சேருவோம்
புதுயுகம் படைப்போம்

வாருங்கள் ,

வென்றுவிடும் தூரத்தில் தான் வானம்.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருத்தி,
தோழி புவனா
Unknown
பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரிடம் சில கேள்விகள்?
ஏன் எங்கள் எவருக்கும் இல்லாத பொதுநலம் உங்களுக்கு?
அப்படி என்ன உங்களுக்கு இந்த சமுகத்தின் பால் காதல்?

சுயநலமும், லாபநோக்கும், சுரண்டலும் தான் வெற்றியின் சூத்திரங்கள் என்று நாங்கள் மாற்றிவிட்டோம்

ஆனால் நீங்களோ,

உங்களது 95 வருட வாழ்க்கையில் 70 வருடம் பொது நலத்தோடு தொன்று ஆற்றியிருக்கிறீர்கள் ஏன்?

வெறும் 12 கி.மீ தூரம் தான் ராமேஸ்வரத்தில் இருந்து, அவர்கள் கதறி அழுத ஓலம் கூட தெளிவாகத்தான் கேட்டது, ஆனாலும் ஒன்றும் செய்யவில்லை நாங்கள்,

ஆனால் நீங்களோ.

8,20,000 மைல்கள் சுற்றுபயணம் செய்திருக்கிறீர்கள் திராவிட இனம் சமத்துவம் அடைய, பேதம் அகல, சிந்தனை பிறக்க.... எப்படி முடிந்தது உங்களால்?

உண்மை தெரியுமா? நீங்கள் பயணித்த இந்த தூரம், பூமியின் சுற்றளவைப்போல் 33- மடங்கு, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3- மடங்கு. என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை ஆனால் நீங்கள் பயணித்திருக்கிறீர்கள் எப்படி?

பெரியாரே, சுய சிந்தனையும், சுய மரியாதையும் இந்த தமிழினம் பெற வேண்டி, நீங்கள் ஆற்றிய அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில்(cassette) பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்...

சற்றே திரும்பி பார்க்கிறேன், சுய தேவைகள்,சினிமா விமர்சன்ங்கள், வெட்டி அரட்டைகள், பெண்கள் பற்றிய கேவலமான பேச்சுக்கள், கேலிகள் கிண்டல்கள் தவிர்த்து நான் வாழும் சமுகத்திற்க்காக, என் சக மனிதனுக்காக எத்தனை நொடிகள் பேசியிருக்கிறேன் என்று சிந்தித்தால், சில மணித்துளிகள் கூட இல்லை என்னிடம் ஆனால் நீங்கள்?

இதையெல்லாம் செய்து விட்டு நான் ஒரு தொண்டன், சாதரண மனிதன் என்று சொல்லுகிறீர்களே எப்படி?

சரி தான் பெண்கள் சரியாக தான் பட்டம் சுட்டியிருக்கிறார்கள் "தந்தை பெரியார்" என்று

ஒன்றை மறந்தேன்

பெரியரே இன்று பெண்கள் நிலை தெரியுமா?

பெண்களுக்கு பிறக்க உரிமையிருக்கிறது (சில கிராமங்கள் தவிர்த்து) ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவுகளை ஆண்கள் தான் முடிவு செய்கிறார்கள் இன்றும்;

வேலைக்கு போகலாம் ஆனால் வீட்டு வேலைகளையும் கட்டாயம் செய்தாக வேண்டும்;

கண்டிப்பாக சுதந்திரம் உண்டு ஆனால் அது எவ்வளவு தூரம் என்பதை ஆண் தான் முடிவு செய்கிறான்...

இப்போதும் பெரியாரே, மீசைக் கொண்ட பேடி பயல்கள், ஒரு பெண்ணை வண்புணர்ந்தால், அவள் தான் கெட்டு போனவள் அந்த நாய் மக்கள் அனைவரும் தன் ஆண்மையை நிருபித்தவர்கள், கெடாதவர்கள்...

நா கூட கூசுகிறது, இன்றும் வரதட்சனை என்று தன்னையும், தன் மானத்தையும் விற்று பிளைக்கிறார்கள் மீசை முறுக்கி கொண்டே!!!

விலைக்கு வாங்க பட்டவன் தானே பிறகென்ன வீராப்பு துணி துவைக்க மாட்டேன், சமையலில் மட்டும் அல்லாமல் எதிலும் உதவி செய்ய மாட்டேன் என்று, உண்மையில் பிச்சைக்காறர்கள் என்று பச்சை குத்தியிருக்க வேண்டும் அவர்கள் நெற்றியில்....

சரி தானே பெரியாரே???

இன்னும் ஓர் சிந்தனையை விதைத்துவிட்டீர்கள்,

உங்களின் தடி சத்தம் கேட்கிறது இன்னும் பலமாக, நீங்கள் மூட்டிய சுய மரியாதை தீ இன்னும் மூர்க்கமாய் எரிய தொட்ங்கியிருக்கிறது, கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என் தேடல்கள் போல், சிந்தனையும், மானுடமும் வழிக் காட்ட இன்னும் வேகமாய் பயணிக்கிறேன் நீங்கள் வித்திட்ட பொது நல பாதையில்....

என்றும் பொது நல பாதையில்,
பெரியாருடன்,
ஓர் கருஞ்சட்டைக்காரனாய் மோகன்
Unknown
பெரியாருடன் ஒரு பயணம் - பயணிக்க வாருங்கள் பதிவுலகமே!!!
கும்புடுறே சாமி!!! னு கூனி குறுகி நிற்காமல், படித்து, பட்டம் பெற்று தன் சமுகத்தையே தீண்டாமையால் ஒதுக்கின ஆதிக்க சாதியினர்க்கு சமமாக ஓர் ஆதி திராவிட சகோதரர் இன்று நிமிர்ந்து நிற்கிறார் என்றால், அதற்கு வித்திட்டு, மரமாக்கியவர் தந்தை பெரியார். அவர் இல்லையென்றால் தமிழனின் பெயரில் இருந்து கூட சாதியை, அகற்றியிருக்க முடியாது. பெரியார் பன்முகம் கொண்டவர், அவர் எப்போதும் கடவுளையும், மதத்தையும் மட்டும் திட்டிக் கொண்டுடே இருந்தார் என்பது எல்லாம் பொய் பிரச்சாரம், 
 
1940 களிலே சோதனைக் குழாயில் குழந்தையை உருவாக்குவதை விஞ்யானம் கண்டுபிடிக்கும் என்று எழுதின மிகப் பெரிய சிந்தனையாளர், பொதுவுடைமை கருத்துக்ளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஓர் சமுக போராளி, எங்கெல்லாம் சமத்துவம் இல்லையோ அங்கெல்லாம் போராடிய ஒரு மானுட காதலர் பெரியார், அப்படிப்பட்ட ஒரு உன்னத சிந்தனையாளரின் 13 வருட சிந்தனைகளை பெரியார் திராவிட கழகம் திரட்டி, தொகுப்பாக்கி நீதிமன்றம் வரை போராடி மீட்டெடுத்து வந்துயிருக்கிறார்கள், அவர்கள் பணி சாதரணம் இல்லை, அளப்பெரிய பணி, அந்த பணியை சிறப்பிக்கும் பொருட்டும், பெரியார் சிந்தனையை கடைத் தமிழனுக்கும் எடுத்துச் செல்லும் விதமாகவும் கீற்று இணையதளம் வருகிற 18 ஆம் தேதி(18-09-2010), சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை அரங்கில் வைத்து பெரியாருடன் ஒரு பயணம் (1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே) என்ற தலைப்பில் கூட்டம் நடத்த உள்ளார்கள்,

அருமையான 5 பேச்சாளர்கள் காலம் வாரியாக பெரியாரின் சிந்தனையை தங்கள் பேச்சின் வழியாக தர இருக்கிறார்கள், இந்த நிகழ்வு கண்டிப்பாக நம் அனைவருக்கும் பெரியார் பற்றிய ஓர் பன்முக அறிமுகமாக இருக்கும், ஆதலால் தோழி/தோழர்களே அனைவரும் தவறாது இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த கூட்டச் செய்தியை உங்கள் வலைப்பூ மூலமாகவோ மின்ன்ஞ்சல் முலமாகவோ உங்கள் நன்பர்களுக்கும் கொண்டு செல்லுங்கள், கூட்டத்திற்கும் அழைத்து வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கண்டிப்பாக கூட்டத்தில் கலந்துக் கொள்வேன்! நீங்கள்!!!

என்றும் தோழமையுடன்,

தோழன் மோகன்,

மலரட்டும் மானுடம்
 
Unknown
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இந்த கவிதை நான் எழுதியது இல்லை, என் அன்பு தோழன் சிவக்குமார் எழுதியது. சிவக்குமார், நான் எப்போதும் நம்பும் இளைய சமுதாயத்தை சேர்ந்தவன், கல்லூரி கால வசந்தங்களில் வசித்தாலும் சமுகத்தின் பால் தீராத காதல் கொண்டவன், அவன் எழுத்துக்களை உலகுக்கு எடுத்து போக வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு இது, இனி இது போல் என்னைச் சுற்றி இருக்கும் இளம் எழுத்தாளர்களை இணையத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறேன். அந்த முயற்சியின் தொடக்கமே இது, பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!


இலங்கை வாழட்டும் 
மானுடம் தின்று
மறுபரிணாமம் ஈனும்
இலங்கை இன்னும்
வாழட்டும்

நீங்கள் பயப்பட வேண்டாம்

இனப் படுக்கொலையை எதிர்த்து
எழும் எங்கள் போராட்டங்கள் எல்லாம்
வருடம் ஒருமுறை நடக்கும்
தேரோட்டம் போல் ஆகிவிடும்

உண்ணாவிரதம் இருந்தோம்
உயிர்கூடக் கொடுத்தோம்
உங்களுக்கென்ன ?

சிரித்து விளையாட
எங்கள் இனத்தின்
இளம் கன்னிகள் !

சிதைத்துப் பார்க்க
எங்கள் இனக்
குழந்தையின் சிற்றுடல் !

இன்னும் என்னவெல்லாம் செய்ய எண்ணம்
எங்களுக்குத் தெரிந்தது
இரண்டு தான்
அஹிம்சை ஒரு வழி
அடிமை ஒரு வழி


இலங்கை இன்னும்
வாழட்டும்

அங்கே தீர்ந்தால் சொல்லுங்கள்

நாங்கள் இருக்கிறோம்
இன்னும் கட்டலாம்
சிலக் கல்லறையை
இனியும் வெடித்துச் சிதறலாம்
சில கருவறையை

_ இ.சிவக்குமார்
Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner