Unknown

காரணம் 1: “எனது சுயநலமும், இந்தியாவின் களவாணித்தனமும்”

இந்த தொடர் பதிவுகளில், முதல் பதவில் நான் ஒப்புக்கொண்டது போல் எனது சிரிப்பை எந்த காரணத்தினால் தொலைத்தேன் என்று யோசித்தபோது, முதல் காரணமாய் எனக்கு தோன்றியது “எனது சுயநலமும், இந்தியாவின் களவாணித்தனமும்” தான்…

தலைப்பே வில்லங்காமயிருக்கே… கண்டிப்பா இது பிரிவிணைவாதம்தான் அல்லது இவன் ஒரு தேசதுரோகி என்று முடிவுகட்டியவர்கள், அப்படியே இந்த வலை சன்னலை மூடிவிட்டு உங்கள் தேசவெறியை மன்னிக்க தேசபக்தியை காட்டவே கண்டுபிடிக்கபட்ட கிரிக்கேட் விளையாட்டையோ? திரையில் மட்டுமே நாட்டுக்காக உயிரை குடுக்கும் உங்கள் கதாநாயகரகளையோ? ரசிக்க சென்றுவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்….
இந்த முன்னெச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் பதிவை படித்துவிட்டு குத்துது குடையுது என்றால் நான் பொறுப்பள்ள..

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த நிலபரப்பில் அல்லது இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன், இந்த அரசிடமிருந்து தான் எனது கல்வி, உணவு, உறவிடம் மற்றும் உடையை, எனதோ அல்லது எனது  பெற்றோரின் உழைப்புக்கொண்டு பெற்றுயிருக்கிறேன் ஆதலால் இது என் தாய் நாடு நான் விரும்பாவிட்டாலும், ஆனால் இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்தியாவை விமர்சிக்கவே கூடாது என்று சொன்னாலோ, இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க ஆசைக்காகவும், இந்திய மற்றும் பன்னாட்டு நிருவனங்களுக்காகவும்  “யாரை வேண்டுமானாலும் கொன்றுகுவிக்கலாம்(தனது சொந்த குடிமகன்கள் உட்பட), அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி அடிக்கலாம்” அல்லது “இனப்படுகொலை செய்ய துணைபோகலாம்”, அதை நான் வேடிக்கைமட்டுமே பார்க்கவேண்டும் என்று சொன்னால், கண்டிப்பாக என்னால் அப்படியிருக்க முடியாது, நான் விமர்சிப்பேன், ஒருவேளை இந்தியாவின் அரசையும், அரசு இயந்திரங்களையும் எதிர்த்தால் மட்டுமே நீதியென்றால் அதற்கும் தயார் நான்…

Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner